இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...!


விவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.

நமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும்  விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.

20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும் குறைவாகவே வரும்.

தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

நானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in/

Solar Water Pumps In Tamil Nadu, Free Solar Water Pump In Tamil Nadu, Tamil Nadu Government Solar Water Pumps

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment